Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொந்தரவு: விமானப் பயணி கைது

Webdunia
வியாழன், 4 ஜூன் 2009 (16:37 IST)
துபாயில் இருந்து மும்பை வந்த எமிரேட்ஸ் விமானத்தின் பணிப்பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேற்றிரவு 10.30 மணிக்குப் புறப்பட்ட அந்த விமானம் இன்று அதிகாலை 3 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

அந்த விமானத்தில் வந்த மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதான ஹாரூன் சலாம் என்பவர் குடிபோதையில், விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். அவருக்கு உணவு அளித்த போது, இந்த செயலில் ஈடுபட்டதாக பணிப்பெண், விமான ஊழியர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து மும்பை விமான நிலையம் வந்திறங்கியதும், ஹாரூனை காவல்துறையினர் கைது செய்தனர்.

துபாயில் பணிபுரியும் ஹாரூன், மும்பைக்கு வந்த போது இந்த செயலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!