Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலியல் தொந்தரவு: விமானப் பயணி கைது

பாலியல் தொந்தரவு: விமானப் பயணி கைது
, வியாழன், 4 ஜூன் 2009 (16:37 IST)
துபாயில் இருந்து மும்பை வந்த எமிரேட்ஸ் விமானத்தின் பணிப்பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறி பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நேற்றிரவு 10.30 மணிக்குப் புறப்பட்ட அந்த விமானம் இன்று அதிகாலை 3 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

அந்த விமானத்தில் வந்த மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதான ஹாரூன் சலாம் என்பவர் குடிபோதையில், விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். அவருக்கு உணவு அளித்த போது, இந்த செயலில் ஈடுபட்டதாக பணிப்பெண், விமான ஊழியர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து மும்பை விமான நிலையம் வந்திறங்கியதும், ஹாரூனை காவல்துறையினர் கைது செய்தனர்.

துபாயில் பணிபுரியும் ஹாரூன், மும்பைக்கு வந்த போது இந்த செயலில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil