Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் துன்புறுத்தலே பீகார் பா.ஜ. எம்.எல்.ஏ. கொலைக்கு காரணம்?

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2011 (14:09 IST)
பீகாரில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வை குத்திக்க்கொன்ற பெண், ஒரு ஆசிரியை என்றும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாலேயே அவர் இந்த கொலையை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

‌ பீகாரில் பா.ஜனதா ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ராஜ்கிஷோர் கேஷ்ரி, இன்று காலை தனது இல்லத்தில் பார்வையாளர்களை சந்தித்தபோது, ரூபம் பதாக் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பெண் ஒருவர், திடீரென அவரைக் கத்தியால் குத்தினார்.

இதில் படுகாயமடைந்த ரா‌‌ஜ்‌கிஷோ‌ர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அதற்கு முன்னதாகவே அவர் உயிரிழந்தார்.

ரா‌‌ஜ்‌கிஷோ‌ரை கத்தியால் குத்திக் கொன்ற பதாக் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பதாக் என்ற அந்த பெண் ஒரு பள்ளி ஆசிரியை என்றும், அவரை ராஜ்கிஷோர் மற்றும் அவரது கூட்டாளிகளும் மூன்றாண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து அவரை துன்புறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பதாக் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்தி முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தம்மை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய ரா‌‌ஜ்‌கிஷோ‌ மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத ஆத்திரத்திலேயே, அவரை பழி வாங்குவதற்காக பதாக் கத்தியால் குத்திக்கொன்றதாக தெரிகிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!