Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்.கிற்கு சொல்லும் செய்தியே கஸாப் தீர்ப்பு: ப.சிதம்பரம்

Webdunia
திங்கள், 3 மே 2010 (17:43 IST)
மும்பை தாக்குதல் வழக்கில் அஜ்மல் கஸாப் குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்படும் செய்தியாகும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மும்பை தாக்குதல் வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், இவ்வழக்கில் கஸாப் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பதும், உள்ளூர்வாசிகள் இரண்டு பேர் விடுவிக்கப்பட்டுள்ளதும் சட்டத்தின் ஆட்சி இந்தியாவில் நடைபெறுவதை காட்டுவதாக உள்ளது என்றும், அதே சமயம் தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யக்கூடாது என்ற செய்தியை பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

மும்பை தாக்குதல் வழக்கு வெளிப்படையாக, சட்டப்படி நடைபெற்றதாகவும், குற்றம் சாற்றப்பட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக வாதாட முழு வாய்ப்புகளும் அளிக்கப்பட்டதாகவும் சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments