குடும்பச் சுமை காரணமாக பள்ளிக் கட்டணம் செலுத்த தந்தை மறுத்ததால், மன விரக்தியடைந்த 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கான்பூரைச் சேர்ந்தவர் ராக்கி யாதவ். 11ஆம் வகுப்பு மாணவியான இவர், கடந்த 2 மாதங்களாக பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை. இதையடுத்து பள்ளி நிர்வாகம் அளித்த நோட்டீஸை தனது தந்தையிடம் ராக்கி கொடுத்தார்.
ஆனால், பால் விற்பனை செய்து வரும் ராக்கியின் தந்தை, வறுமை காரணமாக தம்மால் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாது. எனவே, படிப்பை நிறுத்திவிடுமாறு ராக்கியிடம் கூறினார்.
இதனால் விரக்தியடைந்த ராக்கி நேற்றிரவு தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.