Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு: இந்தியா, சீனா, ரஷ்யா ஒப்புதல்

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2009 (13:57 IST)
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் தோற்றுவிக்கப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நெருக்கமான முறையில் ஒத்துழைக்க இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

இந்தியா-ரஷ்யா-சீனா ஆகிய நாடுகளின் அயலுறவு அமைச்சர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் பெங்களூருவில் இன்று நடந்தது. இதில் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சீனா தரப்பில் யாங் ஜெய் சி, ரஷ்யா தரப்பில் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்.

கடந்த காலத்தில் 3 நாடுகளுக்கிடையே நடந்த எட்டு சுற்று முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் வளர்ச்சி குறித்து 2 மணி நேரம் விவாதித்தனர். பின்னர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து தோற்றுவிக்கப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒன்றாக எதிர்கொள்வது பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்த 3 நாட்டு அயலுறவு அமைச்சர்கள், தங்களின் கூட்டுப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும், ஒத்துழைப்பு மேற்கொள்ள புதிய துறைகளைக் கண்டறிந்துள்ளதாகவும் கூறினர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments