Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்பு யாதவுக்கு பிணை: பாட்னா நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Webdunia
திங்கள், 3 மே 2010 (19:25 IST)
ராஷ்டிரீய ஜனதா தள முன்னாள் எம்.பி. பப்புயாதவுக்கு வழங்கிய பிணையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்,பிணை வழங்கியதற்காக பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டிரீய ஜனதா தள முன்னாள் எம்.பி.பப்புயாதவ் என்கிற ராஜேஷ் ரஞ்சன்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவருக்கு எந்த நீதிமன்றதிலும் பிணை வழங்கக்கூடாது என்று, கடந்த 2007 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாட்னா உயர் நீதிமன்றம் பப்பு யாதவுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் ஏ.கே.பட்நாயக் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பப்புயாதவுக்கு வழங்கிய பிணையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிபிணை வழங்கியதற்காக பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு கண்டனமும் தெரிவித்தனர்.

மேலும் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments