Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி விலகத் தயார் - லாலுபிரசாத்!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (23:11 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்யும்பட்சத்தில், தாமும் ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று லாலு பிரசாத் கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிராவில் வட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்தும்,
தாக்குதலுக்கு காரணமான ராஜ்தாக்கரேயை கைது செய்யக் கோரியும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத்தும் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுபற்றி புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தள கட்சியினர் ஏன் நாடாளுமன்ற எம்.பி. பதவியை மட்டும் ராஜினாமா செய்யவேண்டும்?

நிதிஷ்குமார் உள்பட பீகார் சட்டமன்ற, சட்டமேல்-சபை உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்வதோடு, மாநிலங்களவை உறுப்பினர்களும் பதவி விலகட்டும்.

அப்படிச் செய்தால் தாம் உள்பட ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக உள்ளோம் என்று லாலு பிரசாத் தெரிவித்தார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments