Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணிக்கொடை திருத்த மசோதா நிறைவேறியது

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2009 (18:54 IST)
நாடு முழுவதும் சுமார் 60 லட்சம் ஆசிரியர்கள் பயனடையும் வகையில் பணிக்கொடை திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.

பணிக்கொடை பெறக்கூடிய ஊழியர்களின் வரையறையை மேலும் விரிவுபடுத்தும் வகையிலான இந்த மசோதா கடந்த டிசம்பர் 16ஆம் தேதியன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம் கடந்த 1972ஆம் ஆண்டு பணிக்கொடை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி தனியார் நிறுவனங்களில் ஆசிரியர்களாகப் பணிபுரிவோரும் கடந்த 1997ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு பணிக்கொடை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா தொடர்பான விவாதத்தை முடித்து வைத்துப் பேசிய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் ஹரிஷ் ராவத், இந்த மசோதா நிறைவேறியிருப்பதன் மூலம் 60 லட்சம் ஆசிரியர்கள் பயனடைவார்கள் என்றார்.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை ஏற்று கடந்த 1997ஆம் ஆண்டில் இருந்து இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் அமைச்சர் கூறினார்.

தற்போது பணிக்கொடை அதிகபட்சமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்று இருப்பதை உயர்த்த வகை செய்யும் புதிய திருத்தம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் என்றார் அவர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments