மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, "2002 ஆம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தபோது நரேந்திர மோடி அங்கு போனாரா? கலவரத்தை ஏன் தடுக்கவில்லை? கலவரக்காரர்களை தடுக்க முடியாத அவர் ஆண்மையற்றவர். வலிமையானவராக இருந்திருந்தால் நிச்சயம் கலவரத்தை தடுத்து இருப்பார்" என்று தெரிவித்திருந்தார்.
சல்மான் குர்ஷித்தின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. தலைவர்கள் கூறுகையில், "காங்கிரஸ் தலைவர்கள் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு பேசுவதை சோனியாகாந்தி ஏற்றுக் கொள்கிறாரா? இந்த வெட்கக்கேடான வார்த்தையை கூறியதற்காக சல்மான் குர்ஷித் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினர்.
ஆனால், தனது விமர்சனத்தில் மாற்றம் இல்லை என்று சல்மான் குர்ஷித் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-௦