விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க கோரி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித்தலைவரும் கடப்பா எம்.பி.யுமான ஜெகன்மோகன் ரெட்டி 3 வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
தெலங்கானா பகுதியில் உள்ள நிஜாமாபாத்தில் கடந்த 10ஆம் தேதி உண்ணாவிரதம் தொடங்கி ஜெயகன்மோகன் ரெட்டியின் உண்ணாவிரதம் இன்று 3வது ந ாளை எட்டியுள்ளது. இந்த உண்ணாவிரதத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
மேலும் பதவியை ராஜினாமா செய்த 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், நடிகை ரோஜா உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.