Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு, கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து: மத்திய அரசு!

Webdunia
சனி, 1 நவம்பர் 2008 (01:08 IST)
தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சனிக்கிழமை வெளியிடப்படும் என்று, மத்திய கலாசா ர‌ த்துறை அமை‌ச்ச‌ர ் அம்பிகா சோனி தெரிவித்தார்.

தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே செம்மொழி அந்தஸ்து வழங்கி உள்ளது. இந்த நிலையில் தெலுங்கு, கன்னடத்துக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று, பல்வேறு அரசியல் மற்றும் சமுதாய தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வந்திருந்தது.

இந்த கோரிக்கை பற்றி பரிசீலிப்பதற்காக மொழியியல் அறிஞர்கள் குழுவை மத்திய அரசு நியமித்தது. அந்த குழுவின் பரிந்துரைப்படி, தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சனிக்கிழமை வெளியிடப்படும் என்று, மத்திய கலாசா ர‌ த்துறை அமை‌ச்ச‌ர ் அம்பிகா சோனி தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த பிரச்சனை தொடர்பாக சென்னை உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் ரிட் மனு ஒன்று நிலுவையில் இருந்து வருவதால், அந்த மனுவை விரைவில் பைசல் செய்யும்படி மத்திய அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments