Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெலுங்கானா: சிதம்பரம் கருத்துக்கு சந்திரசேகர ராவ் வரவேற்பு

தெலுங்கானா: சிதம்பரம் கருத்துக்கு சந்திரசேகர ராவ் வரவேற்பு
ஹைதராபாத் , வெள்ளி, 1 ஜனவரி 2010 (10:27 IST)
தெலுங்கானா அமைக்கும் விவகாரத்தில் ‘பல்டி’ இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளதை வரவேற்றுள்ள தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், இதனை தெலுங்கானா மக்களுக்கு புத்தாண்டு பரிசாக கருதுவதாகக் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், “தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு இன்று (நேற்று) தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாங்கள் இதனை வரவேற்கிறோம். தெலுங்கானா மக்களுக்கு இது புத்தாண்டு பரிசாகும” என்றார்.

தேர்தல் அறிக்கையிலேயே தெலுங்கானா பற்றி குறிப்பிட்டுள்ளதாக காங்கிரஸ் தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள இதர அரசியல் கட்சிகளின் ஆதரவையும் தெலுங்கானா விஷயத்தில் காங்கிரஸ் பெறும் என்றும் சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil