Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானா தனி மாநில மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் அனுமதி

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2014 (17:37 IST)
நாடாளுமன்றத்தில் தெலங்கானா தனி மாநில மசோதாவை தாக்கல் செய்ய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடாரை சுமூகமாக நடத்த உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரணாப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
FILE

தெலங்கானா விவகாரம், தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் ஊழல் எதிர்ப்பு மசோதா உள்ளிட்ட விவகாரங்களால் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றம் 4-வது நாளாக இன்றும் முடங்கியது.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கூச்சல் குழப்பம் ஏற்படுத்துவது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்று கூறியுள்ள அவர், நாடாளுமன்றம் விவாத களமாக தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்படுத்தி வரும் தெலங்கானா தனி மாநில மசோதாவை தாக்கல் செய்ய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அனுமதி அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments