Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கிச் சூடு விவகாரம்: இந்தியா - இத்தாலி பேச்சு தோல்வி!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2012 (19:18 IST)
இத்தாலி கப்பல் பாதுகாவலர்களால் இந்திய மீனவர்கள் சுடப்பட்ட விவகாரத்தில் இந்தியா - இத்தாலி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

கேரள எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, இத்தாலி கப்பலில் இருந்த பாதுகாவலர்களால் சுடப்பட்டு இந்திய மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கேரள நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதநிடையே,மீனவர்கள் சுடப்பட்டது சர்வதேச கடல் எல்லை என்று பிடிவாதம் பிடித்து வரும் இத்தாலி அரசு, இதன் காரணமாக இவ்வழக்கு விசாரணையின் வரம்பு கேரள நீதித்துறையின் கீழ் வராது என கூறி வருகிறது.

இந்நிலையில்,இப்பிரச்னை தொடர்பாக இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் இத்தாலிய அயலுறவுத் துறை அமைச்சர் கிலியோ டெர்ஷி ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் இருதரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இத்தகவலை பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments