இத்தாலி கப்பல் பாதுகாவலர்களால் இந்திய மீனவர்கள் சுடப்பட்ட விவகாரத்தில் இந்தியா - இத்தாலி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
கேரள எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, இத்தாலி கப்பலில் இருந்த பாதுகாவலர்களால் சுடப்பட்டு இந்திய மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கேரள நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதநிடையே,மீனவர்கள் சுடப்பட்டது சர்வதேச கடல் எல்லை என்று பிடிவாதம் பிடித்து வரும் இத்தாலி அரசு, இதன் காரணமாக இவ்வழக்கு விசாரணையின் வரம்பு கேரள நீதித்துறையின் கீழ் வராது என கூறி வருகிறது.
இந்நிலையில்,இப்பிரச்னை தொடர்பாக இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் இத்தாலிய அயலுறவுத் துறை அமைச்சர் கிலியோ டெர்ஷி ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் இருதரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இத்தகவலை பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார்.