நாக்பூரில் திருமண நிகழ்ச்சியை முடித்து திரும்பி கொண்ட பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 8 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரிலிருந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் திருமண நிகழ்ச்சி ஒன்றை முடித்து வத்ரா நகர் திரும்பி கொண்டிருந்தத பஸ் ஒன்று ஷெட்கோன் அருகே வந்து கொண்டிருந்தது, அப்போது திடீரென பஸ் தீ பிடித்து எரிந்தது. இதில் 2 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
விபத்தில் சிக்கிய 10 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்ஸில் தீ பிடித்ததற்கு காரணம் தெரியப்படவில்லை. <l>