மோடி எத்தனை முறை தேர்தலில் நின்றார் என்று எனக்கு தெரியாது. ஆனால் முதல் முறையாக அவர் திருமணமானதை ஒப்புக் கொண்டுள்ளார். இளம்பெண்ணை வேவு பார்த்த மோடி, இப்படித்தான் பெண்களுக்கு மரியாதை தருகிறார் போலும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
Rahul Gandhi - J&K election campaign
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது வேட்பு மனுவில் தான் யசோதா பென் என்ற பெண்ணை திருமணம் செய்ததாகவும், அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தனக்கு திருமணம் நடந்ததை இதுநாள் வரை மறைத்த மோடியை ௦எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடாவில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-
மோடி எத்தனை முறை தேர்தல்களில் போட்டியிட்டார் என்பது எனக்கு தெரியாது. இதுவரை எந்த தேர்தலிலும் அவர் தன் மனைவி பெயரை குறிப்பிடவில்லை. முதல் முறையாக அவர் தனக்கு திருமணமானதை இப்போது எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் 2009 ஆம் ஆண்டு மோடியின் உத்தரவின்பேரில் இளம்பெண் ஒருவர் வேவு பார்க்கப்பட்டார். அதன்பின்னர் டெல்லியில் பெண்களுக்கு அவர் மரியாதை அளிப்பதாக பாஜகவினர் போஸ்டர்கள் ஒட்டினார்கள். பெண்களுக்கு இப்படிப்பட்ட மரியாதையைத்தான் அவர்கள் அளிக்கிறார்கள் போலும் என்று ராகுல் காந்தி பேசினார்.