Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருக்குமிடம் தெரியும்: ப.சிதம்பரம்

Webdunia
சனி, 1 அக்டோபர் 2011 (13:24 IST)
நிழலுக தாதாவும், மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளியுமான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் எங்கு உள்ளான் என்பது இந்தியாவுக்கு தெரியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர்,மேலும் கூறியதாவது:

தாதா தாவூத் இப்ராஹிம் குறித்து பல தடவை பாகிஸ்தானிடம் எடுத்து கூறப்பட்டது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது. அவன் எங்கு இருக்கிறான் என்று எங்களுக்கு தெரியும்.

தற்போது தாவூத் இப்ராஹிமின் மகனுக்கு கராச்சியில் திருமணம் நடந்தது. ஆனால் பாகிஸ்தானின் அயலுறவுத் துறை அமைச்சகம் தாவூத் அங்கு இல்லை என்று மறுத்து உள்ளது.

குற்றவியல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தாவூத் உள்ளிட்ட 20 நபர்கள் பட்டியல் பலமுறை பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.ஆனால் பாகிஸ்தான் மீண்டு மீண்டும் அங்கு அவன் இருப்பதை மறுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments