Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருக்குமிடம் தெரியும்: ப.சிதம்பரம்

தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருக்குமிடம் தெரியும்: ப.சிதம்பரம்
புதுடெல்லி , சனி, 1 அக்டோபர் 2011 (13:24 IST)
நிழலுக தாதாவும், மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளியுமான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் எங்கு உள்ளான் என்பது இந்தியாவுக்கு தெரியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர்,மேலும் கூறியதாவது:

தாதா தாவூத் இப்ராஹிம் குறித்து பல தடவை பாகிஸ்தானிடம் எடுத்து கூறப்பட்டது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் தரப்பு மறுப்பு தெரிவித்து வருகிறது. அவன் எங்கு இருக்கிறான் என்று எங்களுக்கு தெரியும்.

தற்போது தாவூத் இப்ராஹிமின் மகனுக்கு கராச்சியில் திருமணம் நடந்தது. ஆனால் பாகிஸ்தானின் அயலுறவுத் துறை அமைச்சகம் தாவூத் அங்கு இல்லை என்று மறுத்து உள்ளது.

குற்றவியல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தாவூத் உள்ளிட்ட 20 நபர்கள் பட்டியல் பலமுறை பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.ஆனால் பாகிஸ்தான் மீண்டு மீண்டும் அங்கு அவன் இருப்பதை மறுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil