Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தணிக்கை தேர்வு முடிவுகள் வெளியீடு

தணிக்கை தேர்வு முடிவுகள் வெளியீடு
புதுடெல்லி: , வியாழன், 13 ஆகஸ்ட் 2009 (20:58 IST)
செக்சன் ஆபிசர் என்று அழைக்கப்படும் தணிக்கை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, செக்சன் ஆபிசர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்வின் முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. இதில் 483 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்கள், இந்திய கணக்கு தணிக்கையாளர் அலுவலகங்களில் நியமனம் செய்யப்படுவார்கள். இதற்கான போட்டித் தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. 2 லட்சத்து 24 ஆயிரத்து 420 பேர் தேர்வு எழுதினர். ஆயிரத்து 678 பேர் கடந்த மாதத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் 483 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தேர்வு முடிவுகளை 'எஸ்எஸ்சி ரிசல்ட்ஸ் டாட் இன்' என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil