Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெ‌ல்‌லி‌யி‌ல் 15 ‌திருந‌ங்கைக‌ள் ‌தீ‌யி‌ல் ப‌லி

டெ‌ல்‌லி‌யி‌ல் 15 ‌திருந‌ங்கைக‌ள் ‌தீ‌யி‌ல் ப‌லி
, திங்கள், 21 நவம்பர் 2011 (09:20 IST)
டெல்லியில் நடந்த திருநங்கைகளின் மாநாட்டில் ஏ‌ற்ப‌ட்ட தீ விபத்‌தி‌ல் 15 பேர் உட‌ல் கரு‌கி பலியானா‌ர்க‌ள்.

கிழக்கு டெல்லியில் நந்த் நக்ரி பகுதியில் உள்ள ஒரு சமுதாய கூடத்தில், திருநங்கைகளின் மாநாடு 3 நாட்கள் நடந்தது. இறுதி நாளான நே‌ற்று நூற்றுக்கணக்கான பேர் கூடி இருந்தனர்.

அங்கேயே உணவு‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது. அப்போது சமையல் பகுதியில் இருந்து திடீரெ‌ன்று தீ, மாநாடு நடந்த இடத்துக்கு பரவியது. இதனால் சமுதாய கூடத்தின் உள் பகுதியில் ஏ‌ற்ப‌ட்ட தீயில் ‌சி‌க்‌‌கி 15 பே‌ர் உட‌ல் கரு‌கி ப‌லியானா‌ர்க‌ள். 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இ‌ந்த ‌விப‌த்து கு‌றி‌த்து காவ‌ல்துற‌ை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விசாரணை மே‌ற்கொ‌‌ண்டன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil