Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி: பணம் பறிக்கும் கும்பல் கைது

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2009 (19:08 IST)
தலைநகர் டெல்லியில் வீட்டு வேலைக்கு பெண்களை அமர்த்திக் கொடுப்பதாகக் கூறிக் கொண்டு, பின்னர் அந்தப் பெண்கள் மூலம் பாலியல் புகார் கூறி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வங்கி மேலாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் டெல்லி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஒரு வழக்கறிஞர், 2 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

புகார் அளித்தவரிடம் இருந்து 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அந்தக் கும்பல் பறிக்க முயன்றதாகத் தெரிய வந்துள்ளது.

புகார் கூறப்பட்ட வழக்கறிஞரின் அலுவலகத்தில் காவல்துறையின அதிரடி சோதனை நடத்தியதில், அங்கிருந்து 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வங்கி மேலாளரிடம் இருந்து அந்தப் பணத்தை அக்கும்பல் பறித்திருந்த்தும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!