Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி: பணம் பறிக்கும் கும்பல் கைது

டெல்லி: பணம் பறிக்கும் கும்பல் கைது
, வெள்ளி, 18 டிசம்பர் 2009 (19:08 IST)
தலைநகர் டெல்லியில் வீட்டு வேலைக்கு பெண்களை அமர்த்திக் கொடுப்பதாகக் கூறிக் கொண்டு, பின்னர் அந்தப் பெண்கள் மூலம் பாலியல் புகார் கூறி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வங்கி மேலாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் டெல்லி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஒரு வழக்கறிஞர், 2 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

புகார் அளித்தவரிடம் இருந்து 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அந்தக் கும்பல் பறிக்க முயன்றதாகத் தெரிய வந்துள்ளது.

புகார் கூறப்பட்ட வழக்கறிஞரின் அலுவலகத்தில் காவல்துறையின அதிரடி சோதனை நடத்தியதில், அங்கிருந்து 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வங்கி மேலாளரிடம் இருந்து அந்தப் பணத்தை அக்கும்பல் பறித்திருந்த்தும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil