விலையுயர்ந்த கார்கள் உட்பட பல்வேறு வாகனங்களை திருடும் கும்பலைச் சேர்ந்த 3 பேரை டெல்லி
காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வெளிநாட்டு சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருடப்பட்ட அரசு வாகனங்களில் சென்று இக்கும்பல் வாகனத் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கைதான 3 பேரிடம் இருந்தும் 12-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சொகுசுக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை உதவி ஆணையர் தாலிவால் தெரிவித்தார்.
ஹரியானா, உத்தரப்பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளிலும் இக்கும்பல் திருடியிருப்பது தெரிய வந்துள்ளது.