காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா கட்சித் தலைவர் லாலு கூறியுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை, ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, பீகார் மாநிலத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனக்கும், சோனியாவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும், பீகார் வறட்சி குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.