Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியாவின் கனவு திட்டமான உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேறியது!

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2013 (12:27 IST)
FILE
எதிர்க்கட்சிகள் தெரிவித்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் உணவுப் பாதுகாப்பு மசோதா நேற்று இரவு நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் உணவுப் பாதுகாப்பு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின்போது, பல்வேறு கட்சிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்ட திருத்தங்கள், நிராகரிக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்தார்.

அதன் பின்னர், மசோதா குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்பு மசோதாவை அமல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தி‌ய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இது சட்டரீதியிலான உரிமையாகும். இதில் உள்ள குறைகள் களையப்படும். இது முழு நிறைவானது அல்ல. மசோதாவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எப்போது அமல்படுத்துவது என முடிவு செய்யப்படவில்லை என்றார்.

உணவுப் பாதுகாப்பு மசோதாவை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அரை மனதுடன் நிறைவேற்றியிருப்பதாக பா.ஜனதா விமர்சித்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், உணவுப் பாதுகாப்பு மசோதாவில் உள்ள குறைகள் சரி செய்யப்படும் என்றார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments