மக்களவைத் தலைவர் மீராகுமாரின் செயலராக பணியாற்றும் ஏ.பி.பாதக்கின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
வருமானத்துக்கு அதிகமாக முறைகேடான வழிகளில் சொத்து சேர்த்திருப்பதாக பாதக் மீது கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து அவரது டெல்லி மற்றும் லக்னோ வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஒரு மாதத்துக்கு முன்பு ஊழல் கண்காணிப்பு ஆணையர், சிபிஐ-யிடம் தெரிவித்திருந்தார்.
பாதக் 6 மாதத்துக்கு முன்புதான் மீராகுமாரின் செயலராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.