Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொகுசு வீடு, பாதுகாப்பு வேண்டாம் - அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2013 (13:23 IST)
டெல்லி முதலமைச்சராக லீலா மைதானத்தில் நடக்கும் விழாவில் பதவி ஏற்கும் அரவிந்த் கெஜ்ரிவால், தமக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
FILE

நாளை மறுநாள் ராம் லீலா மைதானத்தில் நடக்கும் விழாவில் டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது.அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக டெல்லி முதல்வருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள கெஜ்ரிவாலுக்கும் இசட் பாதுகாப்பு வழங்குவது குறித்து டெல்லி மாநகர காவல் துறை அதிகாரி கடிதம் எழுதி இருந்தார்.

FILE
இதுதொடர்பாக கெஜ்ரிவால் எழுதியுள்ள பதில் கடிதத்தில்,

பாதுகாப்பு கொடுக்க முன்வந்ததற்கு நன்றி. ஏற்கெனவே கூறியுள்ளபடி எனக்கு எவ்வித பாதுகாப்பும் தேவையில்லை. இறைவனே எனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு என கூறியுள்ளார்.

மேலும், அமைச்சராக பொறுப்பேற்க உள்ளவர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் ஏற்கெனவே டெல்லியில் சொந்த வீடு இருந்தால் அரசு இல்லம் ஒதுக்கப்பட மாட்டாது எனவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments