Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சொகுசு வீடு, பாதுகாப்பு வேண்டாம் - அரவிந்த் கெஜ்ரிவால்

சொகுசு வீடு, பாதுகாப்பு வேண்டாம் - அரவிந்த் கெஜ்ரிவால்
, செவ்வாய், 24 டிசம்பர் 2013 (13:23 IST)
டெல்லி முதலமைச்சராக லீலா மைதானத்தில் நடக்கும் விழாவில் பதவி ஏற்கும் அரவிந்த் கெஜ்ரிவால், தமக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
FILE

நாளை மறுநாள் ராம் லீலா மைதானத்தில் நடக்கும் விழாவில் டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது.அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக டெல்லி முதல்வருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள கெஜ்ரிவாலுக்கும் இசட் பாதுகாப்பு வழங்குவது குறித்து டெல்லி மாநகர காவல் துறை அதிகாரி கடிதம் எழுதி இருந்தார்.

webdunia
FILE
இதுதொடர்பாக கெஜ்ரிவால் எழுதியுள்ள பதில் கடிதத்தில்,

பாதுகாப்பு கொடுக்க முன்வந்ததற்கு நன்றி. ஏற்கெனவே கூறியுள்ளபடி எனக்கு எவ்வித பாதுகாப்பும் தேவையில்லை. இறைவனே எனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு என கூறியுள்ளார்.

மேலும், அமைச்சராக பொறுப்பேற்க உள்ளவர்களுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் ஏற்கெனவே டெல்லியில் சொந்த வீடு இருந்தால் அரசு இல்லம் ஒதுக்கப்பட மாட்டாது எனவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil