சுக்மா சென்ற அலெக்சுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு
, வெள்ளி, 4 மே 2012 (09:19 IST)
மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று காலை சுக்மா சென்றார். அவருக்கு மனைவி கண்ணீர் மல்க மகிழ்ச்சியும், மக்கள் வரவேற்பும் அளித்தனர்.சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் கடந்த மாதம் 20ஆம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் சட்டீஸ்கர் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்டுகள் நேற்று விடுவித்தனர்.12
நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட அலெக்ஸ் பால்மேனன் இன்று காலை சுக்மா மாவட்டத்திற்கு வந்தார். அவரது மனைவி ஆஷா, சகோதரர் ஆனந்த், கிராம மக்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.அனைவரின் வரவேற்பையும் ஏற்றுக் கொண்ட அலெக்ஸ் பால்மேனன், முதல்வர் ராமன் சிங்கை இன்று சந்தித்து பேசுகிறார்.