Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுல்தான்பூர் தொகுதியில் வருண் காந்தி ஆரவார வேட்பு மனுத்தாக்கல்

Webdunia
செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (15:21 IST)
உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடும் வருண் காந்தி இன்று தனது வேட்பு மனுவை பாஜக தொண்டர்கள் புடை சூழ ஆரவாரமாக தாக்கல் செய்தார்.
Varun Gandhi nomination filed
நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் புடைசூழ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
கடந்த 2009 ஆம் ஆண்டு பிலிபிட் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வருண் காந்தி இம்முறை சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதன் மூலம் இந்த தொகுதியில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
 
இதற்கிடையே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய தொண்டர்களுடன் பேரணியாக சென்ற வருண் காந்தியை தடுத்த அதிகாரிகள் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி தடை விதித்தனர்.
 
வேட்பு மனுவை தாக்கல் செய்ய வருண் காந்தியுடன் சென்ற தொண்டர்கள் எடுத்து சென்ற பதாகைகளில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் படங்கள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments