Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுல்தான்பூர் தொகுதியில் வருண் காந்தி ஆரவார வேட்பு மனுத்தாக்கல்

சுல்தான்பூர் தொகுதியில் வருண் காந்தி ஆரவார வேட்பு மனுத்தாக்கல்
, செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (15:21 IST)
உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடும் வருண் காந்தி இன்று தனது வேட்பு மனுவை பாஜக தொண்டர்கள் புடை சூழ ஆரவாரமாக தாக்கல் செய்தார்.
Varun Gandhi nomination filed
நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் புடைசூழ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
கடந்த 2009 ஆம் ஆண்டு பிலிபிட் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வருண் காந்தி இம்முறை சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதன் மூலம் இந்த தொகுதியில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
 
இதற்கிடையே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய தொண்டர்களுடன் பேரணியாக சென்ற வருண் காந்தியை தடுத்த அதிகாரிகள் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி தடை விதித்தனர்.
 
வேட்பு மனுவை தாக்கல் செய்ய வருண் காந்தியுடன் சென்ற தொண்டர்கள் எடுத்து சென்ற பதாகைகளில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் படங்கள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil