Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசங்கர் மேனன் மார்ச் 5இல் ஆப்கானிஸ்தான் பயணம்

Webdunia
திங்கள், 1 மார்ச் 2010 (13:16 IST)
ஆப்கானிஸ்தானில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து அந்நாட்டு அதிபர், அதிகாரிகளுடன் விவாதிக்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் வரும் 5ஆம் தேதி ஆப்கானிஸ்தான் செல்கிறார்.

காபூலில் மார்ச் 5, 6ஆம் தேதிகளில் தங்கியிருக்கும் சிவசங்கர் மேனன், அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்ஸாய், உயரதிகாரிகளை சந்தித்து, ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விவாதிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த 26ஆம் தேதி தாலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 9 இந்தியர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து ஆப்கானிஸ்தான் சென்று அந்நாட்டில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பேச்சு நடத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதன் பேரில் சிவசங்கர் மேனன் வரும் 5ஆம் தேதி அவசரப் பயணம் மேற்கொள்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments