சிறையில் இருக்கும் கைதிகளின் நன்னடத்தையை கவனத்தில் கொண்டு இயற்றப்பட்டிருக்கும் இத்திட்டம் கைதிகள் அதிக வருமானம் பெற வாய்ப்புகளை ஏற்படுத்தி தருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் டெல்லியில் துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் பெற்றபிறகு ஒரு மாத காலத்திற்க ுள ் நடைமுறைப்படுத்தப்படுமென தெரிகிறது.
இத்திட்டம் கைதிகளின் நம்பிக்கையையும், வாழ்கை தரத்தையும் மேம்படுத்தி கொள்ள உதவும் அதே நேரத்தில், பிற கைதிகளுக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட ஊக்கத்தை அளிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைக்கு வெளியே சென்று பணிபுரியும் கைதிகளுக்கு பொதுத்துறை பணிகள், தோட்டக்கலை பணிகள், கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்கும் கடைகள் மற்றும் தனியார் பணிகள் கூட அளிக்கப்படலாமென தெரிகிறது.