கல்விக் கடன் வழங்க மறுக்கும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் இன்று பேசியபோது இதனை தெரிவித்த அவர், கல்விக் கடனை நிராகரிக்கும் பொறுப்பு கிளை மேலாளருக்கு இல்லை என்றார்.
கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்று நகல் வழங்க வேண்டும் என்றும் சிதம்பரம் கூறினார்.