கேரளா மாநில முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உம்மன் சாண்டி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கேரளாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 72 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து உம்மன் சாண்டி 2வது முறையாக முதலமைச்சராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.எஸ்.கவாய் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.