Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குளிர்கால கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா

குளிர்கால கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா
நாக்பூர் , ஞாயிறு, 9 அக்டோபர் 2011 (10:41 IST)
வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது:

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததாக ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது. இது குறித்து ஹசாரே விளக்கமளிக்க வேண்டும்.

ஹசாரே குழுவினரிடம் ஒப்புக் கொண்டபடி, லோக்பால் மசோதா வரம்புக்குள் மக்கள் சாசனம், கீழ்நிலை ஊழியர்களையும் விசாரித்தல், மாநிலங்களில் லோக்ஆயுக்தவை ஏற்படுத்துதல் ஆகியவற்றை கொண்டுவரவுள்ளோம்.

இந்த மசோதாவை வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil