Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குற்றச்சாற்றுக்குள்ளான நீதிபதிகளை பதவி நீக்க புதிய மசோதா

குற்றச்சாற்றுக்குள்ளான நீதிபதிகளை பதவி நீக்க புதிய மசோதா
புதுடெல்லி , வியாழன், 2 டிசம்பர் 2010 (12:26 IST)
கடும் குற்றச்சாற்றுகளுக்கு உள்ளான உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக எழுந்த அமளிக்கிடையே மக்களவையில் இந்த மசோதாவை சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தாக்கல் செய்தார்.

ஏற்கெனவே இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய உயர் நிலைக் குழு அமைக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது.

இந்த புதிய மசோதாவின்படி உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி, தான் பதவியேற்ற 30 நாள்களுக்குள் தனது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil