Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் கலவரம்: நரேந்திர மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2012 (15:24 IST)
நானாவதி கமிஷன் முன்பு நரேந்திர மோடி ஆஜராக உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2002 ல் ஏற்பட்ட குஜராத் கலவரம் தொடர்பாக விசாரிக்க நானாவதி கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த கமிஷன் முன்பு நரேந்திர மோடி நேரில் ஆஜராகி குறுக்கு விசாரணைக்கு பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி ஜன் சங்கார்ஷ் மஞ்ச் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

இந்த மனு இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அகில் குரேஷி மற்றும் சோனியா கோகனி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள்,நானாவதி கமிஷன் முன்பு மோடி ஆஜாகத் தேவையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments