Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் மூலம் ஈழத் தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க முற்படாதது ஏன்? பால் தாக்ரே வினா

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2011 (21:06 IST)
பாகிஸ்தானுடனான பிரச்சனைகளை கிரிக்கெட் இராஜதந்திரத்தின் மூலம் தீர்க்க முயற்சிக்கும் மத்திய அரசு, அதே பாணியில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண முற்படாதது ஏன் என்று சிவ் சேனா தலைவர் பால் தாக்ரே வினா எழுப்பியுள்ளார்.

சிவ் சேனா கட்சி இதழான சாம்னாவில் இவ்வாறு எழுதியுள்ளார் பால் தாக்ரே. "இலங்கைத் தமிழர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். பாகிஸ்தானுடன் நட்பை மேம்படுத்த கிரிக்கெட் இராஜதந்திர முறையை கடைபிடிக்கிறோம். இதே வழியில் இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் தீர்க்க ஏன் இந்திய அரசு முயற்சிக்கவில்லை என்று கேட்டுள்ள பால் தாக்ரே, பாகிஸ்தான் பிரதமருக்கு விடுக்கப்பட்ட அழைப்பைப்போல் சிறிலங்க அதிபருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளத ா" என்று வினா எழுப்பியுள்ளார்.

கிரிக்கெட் போட்டியை காண வந்த பாகிஸ்தான் பிரதமருடன் இந்தியப் பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தையில் எத்தனை பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டது என்றும் பால் தாக்ரே வினா எழுப்பியுள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments