காஷ்மீரின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணானது : ஐக்கிய நாட்டு சபை
, ஞாயிறு, 1 ஏப்ரல் 2012 (14:55 IST)
காஷ்மீரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணானது என ஐக்கிய நாட்டு சபை தெரிவித்துள்ளது. காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பது குறித்து விசாரணை நடத்திய ஐக்கிய நாட்டு பிரதிநிதி ஹெய்னஸ் கூறியதாவது, காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ளது. அங்கு வன்முறையில் ஈடுபடுவோரை சுட, ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் இந்த சட்டத்தில் தரப்பட்டுள்ளது. இந்தியா போன்ற மிக பெரிய ஜனநாயக நாடுகளில் ராணுவத்திற்கு சிறப்பு அதிகார சட்டங்களுக்கு இடமில்லை. எனவே இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். என்னுடைய இந்த காஷ்மீர் பயணத்தின்போது, இந்த சட்டம் மிகவும் கொடுமையானது மட்டுமின்றி வெறுக்கத்தக்கதும் கூட என பலரும் வருத்தத்துடன் கூறினர். மேலும் காஷ்மீரின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணானது என்றார்.இந்தியாவில் வலுவான மனித உரிமைச் சட்டங்கள் அமலில் இருக்கும்போது சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் தொடர்ந்து கொண்டு தான் கொண்டிருக்கின்றன என்றார்.