காமன்வெல்த் ஊழலில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுரேஷ் கல்மாடியின் காவலை மேலும் 14 நாள் நீடித்து டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காமல்வெல்த் போட்டியில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்த சுரேஷ் கல்மாடி மீது குற்றச்சாற்று எழுந்தது.
இதைத் தொடர்ந்து அவரை சி.பி.ஐ கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த நிலையில் அவரது காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் இன்று கல்மாடி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து கல்மாடியின் காவலை ஜூன் 1ஆம் தேதிவரை நீடித்து டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.