Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு சோனியா எச்சரிக்கை

Ilavarasan
திங்கள், 14 ஏப்ரல் 2014 (11:52 IST)
நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரசை வெற்றி பெற செய்ய வேண்டும். இல்லையெனில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி செல்ல தயாராக இருங்கள் என்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு சோனியா ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
காங்கிரஸ் கட்சி இந்தியாவின் 11 மாநிலங்களில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்த 11 மாநிலங்களிலும் 151 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 100 இடங்கள்கூட கிடைக்காது என்று கருத்துகணிப்புகள் கூறியுள்ளன. இதை மாற்றி காட்டவேண்டும் என்று சோனியா விரும்புகிறார்.
 
11 மாநிலங்களில் உள்ள 151 தொகுதிகளில் கணிசமான இடங்களைப் பிடித்தாலே போதும், ஓரளவு கவுரவமான இடங்களை கைப்பற்றி விடலாம் என்று சோனியா கருதுகிறார். இதை அமல்படுத்த அவர் தன் ஆலோசகர்கள் மூலம் 11 மாநில காங்கிரஸ் முதலமைச்சர்களுக்கும் ஒரு ரகசிய உத்தரவை எச்சரிக்கையாக விடுத்துள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரசை வெற்றி பெற செய்ய வேண்டும். இல்லையெனில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி செல்ல தயாராக இருங்கள் என்பதே சோனியாவின் எச்சரிக்கை உத்தரவாகும்.
 
இந்த எச்சரிக்கையால் காங்கிரஸ் முதல்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மோடி அலையை சமாளித்து எப்படி வெற்றி தேடி கொடுப்பது என்று அவர்கள் தவித்தப்படி உள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments