Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் அரசுக்கு விடை கொடுங்கள்: மோடி ஆவேசப் பேச்சு

Webdunia
ஞாயிறு, 9 பிப்ரவரி 2014 (10:57 IST)
நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு விடை கொடுங்கள் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.

வண்டலூர் பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
FILE

பொதுவாக மத்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே நல்ல உறவு இருக்க வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக மத்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நமது ராணுவத்தில் மதவாத சிந்தனை இருந்தது இல்லை. ஆனால் ராணுவத்தில் எவ்வளவு இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என இந்த அரசு கணக்கு போட ஆரம்பித்தது. இதன் மூலம் மதவாத சிந்தனையை ராணுவத்திலும் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதாவது, இந்த அரசின் சிந்தனை, செயல்படும் முறை பெரிய பிரச்னையில் நாட்டைத் தள்ளிவிடும் நிலையில் உள்ளது. இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால் காங்கிரஸ் அரசு உடனடியாக விடை கொடுங்கள்.

ஊழலில் கூட்டாட்சி: ஊழல் செய்வதில் மாநிலங்களில் உள்ள கட்சிகளுடன் கூட்டாட்சி முறையை மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு கடைப்பிடிக்கிறது. நமது நாட்டில் கூட்டாட்சி முறையே இருந்து வந்தது. ஆனால், காங்கிரஸ் அரசு மாநில அரசுகளை மதிக்காததோடு மோதல் போக்கினை கடைப்பிடிக்கிறது.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், மாநில அரசுகளுடன் தோளோடு தோள் நின்று மாநில அரசுகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு மாநில அரசுகளை அரவணைத்து கூட்டாட்சி முறையைக் கடைப்பிடிக்கவில்லை. மாறாக, ஊழல் செய்வதில் மாநிலத்தில்
FILE

உள்ள சிறிய கட்சிகளுடன் கூட்டாட்சி முறையைக் கடைப்பிடிக்கிறது. தமிழகத்தில் அதுபோன்று நிறைய பேர் உள்ளனர். அவர்கள் யார் என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்கு (கூட்டத்தினருக்கு) தெரியும்.

மக்கள் பாடம் புகட்டுவார்கள்: காங்கிரஸ் தலைவர் ஒருவர் (ராகுல் காந்தி) சனிக்கிழமை குஜராத் சென்று பிரசாரம் செய்துள்ளார். அங்கு தலை கால் புரியாமல் வார்த்தைகளை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். எங்களை ஏமாளி, முட்டாள் என்றெல்லாம் பேசியுள்ளார். யாரை ஏமாற்ற இப்படிப் பேசுகிறார்.

குஜராத் மக்கள் உங்களை நன்கு தெரிந்து வைத்துள்ளனர். வரும் தேர்தலில் குஜராத் மக்களைப் போன்று நாடு முழுவதும் உள்ள மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்டுவார்கள்.

காங்கிரஸ் அரசின் செயல்பாட்டினால் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே மோதல் நடைபெறுகின்றன. மேலும், தண்ணீர், நிலம் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக மாநிலங்களுக்கு இடையே மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் மோடி.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments