Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலால் தூங்கிகொண்டிருந்த சிறுவர்கள் தீயிட்டு கொலை

Webdunia
ஞாயிறு, 24 மார்ச் 2013 (12:08 IST)
FILE
கேரளாவில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த, சிறுவர்கள் இருவர், எரித்து கொலை செய்யப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா வல்லகடவு பகுதியை சேர்ந்த பகவதி (17), சிவா (11) ஆகிய இரு சிறுவர்களும் வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது அவர்கள் தீயிட்டு எரித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சிறுவர்களின் தாய் மாரிமுத்து என்னும் நபருடன் தகாத உறவு கொண்டிருந்ததாக தெரிகிறது. கள்ளகாதலியின் மகன்களுக்கு ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்த மாரிமுத்து கடந்த 21 ஆம் தேதி வீட்டில் தனியாக தூங்கிகொண்டிருந்த சிறுவர்களை தீயிட்டு எரித்து கொன்றார்.

இச்சம்பவத்தை குறித்து விசாரணை மேற்கொண்டுவந்த போலீசார், சிறுவர்கள் கொலை செய்யப்பட்டதற்கான, ஆதாரங்களை கண்டறிந்தனர். இதை தொடர்ந்து கொடூரமாக இரு சிறுவர்களை தீயிட்டு எரித்து கொன்ற மாரிமுத்துவை போலீசார் தேடிவருகின்றனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments