Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்னாடக அமைச்சருக்கு செருப்படி!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2011 (14:14 IST)
தனது குறையைத் தெரிவிக்க காத்திருந்த பா.ஜ.க. தொண்டர், கர்னாடக வீட்டு வசதி அமைச்சர் வி.சோமன்னாவை செருப்பால் தாக்கியதால் கைது செய்ய்யப்பட்டார்.

கர்னாடக மாநில சட்டப் பேரவை அமைந்துள்ள விதான் செளதா முன் இச்சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தை முடித்துகொண்டு, தனது அலுவலக அறையை நோக்கி அமைச்சர் சோமன்னா சென்றபோது, அவரிடம் தனது குறையத் தெரிவிக்கக் காத்திருந்த பிரசாத் என்ற கட்சிக்காரர், தான் அணிந்திருந்த காலனியைக் கழற்றித் தாக்கினார். உடனடியாக அவரை அமைச்சரின் பாதுகாப்பிற்கு வந்திருந்த காவலர்கள் சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

அமைச்சரவை செருப்பால் அடித்த பிரசாத்திடம் ஒரு கத்தியும் இருந்ததென்றும், பாதுகாவலர்கள் அவரை சூழ்ந்தபோது அதனை அவர் தூக்கி எறிந்துவிட்டதாகவும் அங்கிருந்தவர்கள் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments