ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் கனிமொழி சிறையில்தான் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எகத்தாளமாக கூறியுள்ளது.
2 ஜி வழக்கில் திமுக எம்.பி. கனிமொழிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரியிடம் ச ெய்தியாளர்கள் கேட்டபோது,ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் கனிமொழி சிறையில்தான் இருக்க வேண்டும் என்று எகத்தாளமாக கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் சிறையில்தான் இருக்க வேண்டும். இதுதான் நடைமுறையில் உள்ள விதி.
இந்தத் தீர்ப்பு தொடர்பான முழு விவரங்களையும் நாங்கள் படிக்க வேண்டும். அதன் பின்னர் வேண்டுமானால் இது தொடர்பாகக் கருத்து கூற முடியும்.
கீழ் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பில் இருந்து நேர்மாறான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்க வாய்ப்பு உள்ளது.ஏற்கெனவே பல வழக்குகளில் இதுபோன்று நடந்துள்ளது.