Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கை நதியில் பேருந்து விழுந்து 21 பேர் பலியாயினர்!

Webdunia
பாட்னா செல்லும் பயணிகள் பேருந்து ஒன்று கங்கை நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்!

ரக்சுவல் என்ற இடத்தில் இருந்து பாட்னா செல்ல வேண்டிய பேருந்து இன்று காலை 3.30 மணியளவில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டிருந்த மகாத்மா காந்தி சேது பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் இரும்பு தடுப்பை உடைத்துக் கொண்டு நதியில் விழுந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநர், உதவியாளர் உட்பட 21 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வைஷாலி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் லாலன் சிங் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்தப் பகுதிக்கு மருத்துவர்கள் குழு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தது.

மேலும் அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. காவல்துறையினரும், முக்கியத் தலைவர்களும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments