Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக போராடுவேன் - செலினா ஜெட்லி

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக போராடுவேன் - செலினா ஜெட்லி

Ilavarasan

, செவ்வாய், 6 மே 2014 (08:37 IST)
பிரபல பாலிவுட் நடிகையான செலினா ஜெட்லி ஒரினச் சேர்க்கைக்கான உரிமைக்காக தான் தொடர்ந்து போராட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவரது உயிருக்கு ஆபத்து உள்ள போதும், தனது இரட்டை குழந்தைகளுடன் வசித்து வரும் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
 
32 வயதாகும் முன்னாள் மிஸ் இந்தியாவான செலினா ஜெட்லி, ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான ஆதரவு திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது தொடர்பாக ஒரு வீடியோ படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் தனது ஆண் நண்பனை தன் வீட்டிற்கு அழைத்து வரும் ஒரு ஆண், தனது பெற்றோர் சம்மதத்துடன் அவனுடன் உறவு ஏற்படுத்தி கொள்ளும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
 
ஐ.நா. அமைப்பில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஐ.நா மனித உரிமை அமைப்பின் தலைவரான நவி பிள்ளை செலினாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் மும்பையில் வெளியிடப்பட்ட செலினா தயாரித்துள்ள ஓரினச்சேர்க்கை தொடர்பான இரண்டரை நிமிட ஒளிநாடா 1,45,000 பேரால் பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil